Thursday, April 1, 2010

ஊடல் தோற்பது !!




ஜன்னலின் பக்கம்
எதேச்சையாக
கடந்து போன போது ..

நீலநிற சிவனொருவன்
தலைவிரித்து ஆட .
வெட்டின
மின்னலுக்கிடையே,

இடமிருந்து ஒரு
ஆழிப் பேரலையும் ,
வலமிருந்து ஒரு
எரிமலை குழம்பும்
ஒன்றாய் சேர்ந்து,
பூமி பிளந்து ,

சிறிதொரு சப்தமின்றி,
பேரமைதியுடன்
அழிந்து கொண்டிருந்தது
என் உலகம் ...

திடுக்கிட்டு
விழித்துப் பார்க்கையில்

"உன்னுடன் கடைசியாக பேசி
இத்தோடு 57 மணிநேரங்கள்
ஆகிவிட்டன "..

கண்களுக்குள் அலைபாயும்
கருவிழிகள் ...
மேலுதட்டு வியர்வை
துளிகளுடன் ,
உனக்கான
இதுபோன்ற கனவில்
நீ !!

மூச்சுதொடும் தூரத்தில்
நெற்றி விழி நாசி அதரம்
கடந்து வந்து,

இம்முறையேனும்
ஊடலில்
ஜெயிக்க எண்ணி,
அதற்கு மேலும் தொடர
மனமின்றி ,

தலையணை கட்டி
தூங்கிப் போகிறேன் ..!!

5 comments:

மதுரை சரவணன் said...

எதார்த்த வரிகள்.வாழ்த்துக்கள்

JSTHEONE said...

wow machi engayo poitta sooper ... fantastic....

keep rocking

R Srikkant said...

He he :) Nice one!

King Vishy said...

Super machi!! Oodal indri kaadhal engae?!

Venkata Ramanan S said...

@All

Thank You! ;-)