ஜன்னலின் பக்கம்
எதேச்சையாக
கடந்து போன போது ..
நீலநிற சிவனொருவன்
தலைவிரித்து ஆட .
வெட்டின
மின்னலுக்கிடையே,
இடமிருந்து ஒரு
ஆழிப் பேரலையும் ,
வலமிருந்து ஒரு
எரிமலை குழம்பும்
ஒன்றாய் சேர்ந்து,
பூமி பிளந்து ,
சிறிதொரு சப்தமின்றி,
பேரமைதியுடன்
அழிந்து கொண்டிருந்தது
என் உலகம் ...
திடுக்கிட்டு
விழித்துப் பார்க்கையில்
"உன்னுடன் கடைசியாக பேசி
இத்தோடு 57 மணிநேரங்கள்
ஆகிவிட்டன "..
கண்களுக்குள் அலைபாயும்
கருவிழிகள் ...
மேலுதட்டு வியர்வை
துளிகளுடன் ,
உனக்கான
இதுபோன்ற கனவில்
நீ !!
மூச்சுதொடும் தூரத்தில்
நெற்றி விழி நாசி அதரம்
கடந்து வந்து,
இம்முறையேனும்
ஊடலில்
ஜெயிக்க எண்ணி,
அதற்கு மேலும் தொடர
மனமின்றி ,
தலையணை கட்டி
தூங்கிப் போகிறேன் ..!!
5 comments:
எதார்த்த வரிகள்.வாழ்த்துக்கள்
wow machi engayo poitta sooper ... fantastic....
keep rocking
He he :) Nice one!
Super machi!! Oodal indri kaadhal engae?!
@All
Thank You! ;-)
Post a Comment