முரண்
காதை பிடித்து
தூக்கினாலோ ,
கழுத்தை பிடித்து
திருகினாலோ ,
அது குழந்தையென
தெரிந்து ,
அமைதி காக்கிறது
குட்டி பூனையோ,
நாயோ !!!
சற்று முன்
கண்ணயர்ந்த
அன்னையோ ,
சற்றே தள்ளிவிட்டு ,
ஏதோ முணுமுணுக்கிறாள் !!
ஏதும் புரியாமல்
மெதுவாக
அழத் தொடங்குகிறது
அச்சிறு குழந்தை !!
3 comments:
சரியா புரியலையே ரமணன் :(
good one :)
@ச.பிரேம்குமார்..
எப்படி சொல்றதுன்னு தெரிலையே :(
@R.Srikkant
Thanku
Post a Comment