ஊருக்கு வெளியே
வறட்டு சப்பாதிகள்ளிகள் ...
என் முதல் சம்பளத்தின்
அனைத்து ரூபாய்தாள்கள்...
பழைய வாய்பாட்டின்
கடைசி பக்கம் ...
சுனை சுரக்கும்
அந்த மலைப்பாறை...
தூசி படர்ந்த நம்
வகுப்பறை மேஜை ...
பனியில் குளித்த
நிலை கண்ணாடி ...
பாசி படிந்த
பாழும்கிணற்று படிகள்...
மூடியிட்டு
கடலில் வீசியெறிந்த
கண்ணாடி புட்டி ...
சட்டென இவையாவும்
நினைவுக்கு வந்து போயின ,
திருமண அழைப்பிதழில்
உன் பெயருடன்
யார் பெயரையோ,
பார்த்த பிறகு !!
வறட்டு சப்பாதிகள்ளிகள் ...
என் முதல் சம்பளத்தின்
அனைத்து ரூபாய்தாள்கள்...
பழைய வாய்பாட்டின்
கடைசி பக்கம் ...
சுனை சுரக்கும்
அந்த மலைப்பாறை...
தூசி படர்ந்த நம்
வகுப்பறை மேஜை ...
பனியில் குளித்த
நிலை கண்ணாடி ...
பாசி படிந்த
பாழும்கிணற்று படிகள்...
மூடியிட்டு
கடலில் வீசியெறிந்த
கண்ணாடி புட்டி ...
சட்டென இவையாவும்
நினைவுக்கு வந்து போயின ,
திருமண அழைப்பிதழில்
உன் பெயருடன்
யார் பெயரையோ,
பார்த்த பிறகு !!
No comments:
Post a Comment