Sunday, December 27, 2009

நேற்றைய கனவில்...





நேற்றைய கனவில்
சற்றே தள்ளி
நட்பாய் நீயும்,
காதலாய் நானும்..

அடர்ந்த காட்டின்
நிசப்தத்தினூடே ,
ஓர் ஒற்றையடி
பாதையில்
இருவருக்குமான
இடைவெளி காற்று
தான் காமம்
என்றது...

தெரிந்தோ,
தெரியாமலோ,
உரசிக் கொள்கின்றன
நம் கைவிரல்கள்....

No comments: