Tuesday, July 13, 2010

ஒற்றை ரோஜா...


எண்பதுகளில் வந்த
முரட்டு உருவமொன்று
சடன் பிரேக் போட்டு
சற்றே லாவகமாக
வளைந்து செல்கிறது ....

பில்லியனில்
உட்கார்ந்திருக்கும்
புது மனைவி
கணவனின் காதில்
எதையோ
கிசுகிசுக்கிறாள் ...

மாநரக ஓட்டுனர்கூட
Lane Discipline ஐ
சிறிதே மறந்து
இரு சக்கரங்களுக்கு
இடையே விட்டு
கவனமாக
ஓட்டிச் செல்கிறார் ..

சாலையின் அந்தப்பக்கம்
பைத்தியம் என்று
முத்திரை குத்தப்பட்டவர்
கண் இமைக்காமல்
கூரிய பார்வை
பார்க்கிறார்...

நெடுஞ்சாலையில்
விழுந்து கிடக்கிறது
சற்றுமுன் பூத்தவோர்
ஒற்றை ரோஜா..

நான் இதுவரை கண்டது
பழைய காதலின்
மிச்சமா??
மனிதத்தின்
எச்சமா ?

விடை தெரியாமல்,
திரும்பிப் பார்த்துக்கொண்டே
கடந்து போகிறேன்
நானும் !!!....



No comments: