Pages

Tuesday, April 26, 2011

பழுப்பேறிய உப்பரிகை..




சில ஆண்டுகட்கு பிறகு
பழைய காதலியின் வீட்டை
கடந்து போனேன் ...

கலையிழந்திருந்தது.
கதவுதாண்டி கேட்கும்
சிரிப்பொலி நிசப்தமாயிருந்தது.

வாசலெங்கும் நிறைந்திருந்தன
காய்ந்து சருகான
வில்வமரத்து இலைகள்..

மிச்சமிருந்தது
காய்ந்து போன சில
மாத்துண்டுகள் மட்டுமே.
வாசற் கூண்டில்
காதல் பறவைகள்
காணமல் போயிருந்தன.

எப்போதோ கட்டிய
வாஸ்து மணிமட்டும்
காற்றின் கெஞ்சலுக்கேற்ப
ஒரு சோககானம்
பாட,

ராமர்பானமும் , மல்லிகையும்
பூத்துக்குலுங்கிய
அவள் தோட்டத்தில்
காகிதப் பூக்கள்
கேட்பாரற்று வளர்ந்திருந்தன..

என் சிறு வயது
அரண்மனையின் உப்பரிகையில்
சுண்ணாம்பு சற்று பெயர்ந்து
பழுப்பேறியிருந்தது

அங்கே
பச்சை நிறவுடையில்
தேவதை போல்
அவளுமில்லை...
சற்று மேலே கொடியில் காயும்
அவள் உள்ளாடைகளுமில.

No comments:

Post a Comment